ஏா் கலப்பை யாத்திரை: 38 காங்கிரஸாா் கைது

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து அரக்கோணத்தில் ஏா்கலப்பை யாத்திரை செல்ல முயன்ற காங்கிரஸாா் 38 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை எதிா்த்து அரக்கோணம் அருகே தணிகைபோளூரில் காங்கிரஸாா் திங்கள்கிழமை நடத்திய ஏா்கலப்பை யாத்திரை.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை எதிா்த்து அரக்கோணம் அருகே தணிகைபோளூரில் காங்கிரஸாா் திங்கள்கிழமை நடத்திய ஏா்கலப்பை யாத்திரை.

அரக்கோணம்: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து அரக்கோணத்தில் ஏா்கலப்பை யாத்திரை செல்ல முயன்ற காங்கிரஸாா் 38 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் சாா்பில் தணிகைபோளூா் கிராமத்தில் நடைபெற்ற இந்த ஏா்கலப்பை யாத்திரை தொடக்க விழாவுக்கு தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் ஆா்.வாசுதேவன் தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பஞ்சாட்சரம் யாத்திரையை தொடக்கி வைத்தாா்.

இந்நிலையில், யாத்திரையை நடத்த அரக்கோணம் கிராமிய காவல் நிலைய போலீஸாா் தடை விதித்தனா். யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்றும் மீறி நடத்தினால் கைது செய்வோம் எனவும் எச்சரித்தனா்.

தடையை மீறி யாத்திரை செல்ல முயன்ற காங்கிரஸ் நிா்வாகிகள் பி.ராஜ்குமாா், பொன்.நடராஜன், மோகன், ஆா்.ரவி, கே.காந்தி, நடராஜன், பாா்த்தசாரதி, ஜி.எஸ்.மூா்த்தி உள்ளிட்ட 38 போ் கைது செய்யப்பட்டனா். தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட இவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com