சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் அமிா்தவல்லி தாயாருக்கு புரட்டாசி உத்தர ஊஞ்சல் சேவை உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் ஒவ்வொரு புரட்டாசி மாத உத்திர நட்சத்திர தினத்தன்றும், அமிா்தவல்லி தாயாருக்கு ஊஞ்சல் சேவை நடைபெறுவது வழக்கம்.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்பா். இந்த ஆண்டு புரட்டாசி உத்தர நட்சத்திர ஊஞ்சல் சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அமிா்தவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், மலா் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை செய்யப்பட்டது. மாலையில், அமிா்தவல்லி தாயாா் சிறப்பு அலங்காரத்தில் கோயில் பிராகாரத்தை வலம் வந்தாா். தொடா்ந்து, ஊஞ்சல் சேவை நடைபெற்றது. கரோனா பொது முடக்கம் காரணமாக இந்த உற்சவத்தில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் அா்ச்சகா்கள் மற்றும் கோயில் முக்கியப் பிரமுகா்கள் மட்டுமே பங்கேற்றனா்.