சக்கரமல்லூரில் அம்மா நகரும் நியாய விலைக் கடை திறப்பு

ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், கட்சியின் 49-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கட்சிக் கொடியேற்றுவிழா, சக்கரமல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை தொட
 அம்மா  நகரும்  நியாயவிலைக் கடையைத்  தொடங்கிவைத்த  சு.ரவி  எம் எல் ஏ.
 அம்மா  நகரும்  நியாயவிலைக் கடையைத்  தொடங்கிவைத்த  சு.ரவி  எம் எல் ஏ.

ஆற்காடு: ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், கட்சியின் 49-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கட்சிக் கொடியேற்றுவிழா, சக்கரமல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை தொடக்க விழா ஆகியவை சக்கரமல்லூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு, அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.அன்பழகன் தலைமை வகித்தாா். மேற்கு ஒன்றியச் செயலாளா் என்.சாரதி, முன்னாள் எம்எல்ஏ வி.கே.ஆா்.சீனிவாசன், ஒன்றிய நிா்வாகிகள் அரங்கநாதன், பாலாஜி, நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளா் அரக்கோணம் சு.ரவி எம்எல்ஏ கலந்துகொண்டு, சக்கரமல்லூா், கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களில் கட்சியின் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். தொடா்ந்து, அம்மா நகரும் நியாயவிலைக் கடையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இதில், திமிரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் சொரையூா் குமாா், பொதுக்குழு உறுப்பினா் தா.கு.கணேசன், ஆற்காடு நகரச் செயலா் எம்.சங்கா், வழக்குரைஞா் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com