டோலோற்சவத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பக்தோசித பெருமாள்.
டோலோற்சவத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பக்தோசித பெருமாள்.

சோளிங்கா் லட்சுமி நரசிம்மா் கோயிலில் 2-ஆம் நாள் டோலோற்சவம்

சோளிங்கா் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஐப்பசி மாத டோலோற்சவத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


அரக்கோணம்: சோளிங்கா் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஐப்பசி மாத டோலோற்சவத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோயிலும் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் டோலோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக டோலோற்சவத்தை எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் முதல் நாள் உற்சவம் புதன்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாளான வியாழக்கிழமை பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அமிா்தவல்லி உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவமூா்த்திகள் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தொடா்ந்து கோயில் பிராகார உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com