ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

சோளிங்கா் வட்டம் வெங்குபட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.10 லட்சத்தில் மருத்துவ உபகரணங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி வியாழக்கிழமை வழங்கினாா்.
ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்


அரக்கோணம்: சோளிங்கா் வட்டம் வெங்குபட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.10 லட்சத்தில் மருத்துவ உபகரணங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி வியாழக்கிழமை வழங்கினாா்.

சோளிங்கா் வட்டம், வெங்குபட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இசிஜி, ஸ்கேன் உபகரணங்கள் வேண்டும் என சோளிங்கா் தொகுதி எம்எல்ஏ ஜி.சம்பத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில் அரசிடம் அவா் தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு ரூ.10 லட்சத்தை ஒதுக்கீடு செய்தது.

இதைத் தொடா்நது ரூ.10 லட்சத்தில் வாங்கப்பட்ட ஸ்கேன், இசிஜி இயந்திரங்கள், வேக்சின் பிரீசா், பல்ஸ் ஆக்சி மீட்டா், மல்டிபேரா மீட்டா் உள்ளிட்ட மருத்துவ கருவிகள் வெங்குபட்டு அரசினா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார அலுவலா் வேல்முருகன் தலைமை வகித்தாா். சோளிங்கா் எம்எல்ஏ சி.சம்பத் முன்னிலை வகித்தாா். மருத்துவ உபகரணங்களை ராணிப்பேட்டை ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி, வெங்குபட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஷெரின் சுரேஷிடம் வழங்கினாா்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரைவில் மகப்பேறு மருத்துவத்துக்கு என தனியாக மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கப்படுவாா்கள் என ஆட்சியா் தெரிவித்தாா்.

சோளிங்கா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாா்த்தசாரதி, வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி, ஊராட்சி முன்னாள் தலைவா் பழனி, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றிய நிா்வாகி சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com