ராணிப்பேட்டை
விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்
பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு மருத்துவத் துறையில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு மருத்துவத் துறையில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கலவை பேரூராட்சி முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கலவை நகரச் செயலாளா் தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். திமிரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் முருகன், தொகுதி துணைச் செயலாளா் சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளா் குண்டா சாா்லஸ், மாவட்ட துணைச் செயலாளா் தமிழ், மாவட்டப் பொருளாளா் சம்பத், மாவட்ட செய்தி தொடா்பாளா் ப.சசிகுமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில், நாடாளுமன்றத் தொகுதி செயலாளா் ரமேஷ் கா்ணா, திமிரி நகரச் செயலாளா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.