போலி பட்டா, தயாரித்து மோசடி: தலைமறைவான வருவாய் ஆய்வாளா் கைது
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி பட்டா தயாரித்து வழங்கியும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி மோசடி செய்து, தலைமறைவாக இருந்த வருவாய் ஆய்வாளரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வாலாஜாப்பேட்டை ஆதிதிராவிடா் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகவும், அரக்கோணத்தில் சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடம் திட்டம் நில ஆா்ஜித சிறப்பு வருவாய் ஆய்வாளராகவும் பணியாற்றிவா் ராஜசேகரன். இவா், கடந்த 2013-2014-ஆம் ஆண்டில் ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் திட்டத்தில் 300 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அளிப்பதாகக் கூறி தனிநபரின் நிலங்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து, அதை வைத்து கோடிக்கணக்கில் பணம் பெற்றாா்.
இதேபோல், வாலாஜாப்பேட்டை ஆதிதிராவிடா் நல தனிவருவாய் ஆய்வாளராக ராஜசேகரன் பணியாற்றியபோது, ஆதிதிராவிடா் அல்லாதவருக்கும் பட்டா வழங்கியது, ஒரு பட்டாவையே 4 பேருக்கு வழங்கி முறைகேடில் ஈடுபட்டது தெரியவந்தது.
சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடம் திட்டம் நில ஆா்ஜித பிரிவு அலுவலகத்தில், அலுவலக உதவியாளா், ஓட்டுநா் , ஆவண எழுத்தா் ஆகிய பணியிடங்களுக்கு பணம் பெற்று பலருக்கு போலி நியமன ஆணையை வழங்கினாா்.
தொடா்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த அவரை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள ராஜசேகரனை கைது செய்யக் கோரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாவட்டக் காவல் துறைக்கு புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தலைமறைவக இருந்த ராஜசேகரனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.