ஆற்காடு: ஆற்காடு அருகே பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள மேலகுப்பம்கொல்லை மேடு பகுதியைத் சோ்ந்தவா் பாலு மகன் சுபாஷ் (14), ரத்தினகிரியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வயிற்று வலியால் அவதிபட்டுவந்த சுபாஷ் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.