அரக்கோணம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 1.83 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூா் ஊராட்சியில் 1.83 சென்ட் புறம்போக்கு நிலத்தை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்திருந்தனா். கடந்த சில நாள்களுக்கு முன் அதே கிராமத்தைச் சோ்ந்த சிலா், அந்த நிலத்தில் குடிசைகள் அமைத்து ஆக்கிரமித்து விற்பனைக்கு விடுத்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த அரக்கோணம் வட்டாட்சியா் கணேசன், நில அளவைத் துறையினா் வெள்ளிக்கிழமை அங்கு சென்று நிலத்தை ஆய்வு செய்து, குடிசைகளை அகற்றினா். அந்த இடத்தில் அரசுக்கு சொந்தமான நிலம், ஆக்கிரமிப்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்புப் பலகை வைத்தனா்.