விதிமீறிய கடைகளுக்கு அபராதம்

ஆற்காடு, திமிரி பகுதிகளில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு மொத்தம் ரூ. 9,400 அபராதம் விதிக்கப்பட்டது.

ஆற்காடு, திமிரி பகுதிகளில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு மொத்தம் ரூ. 9,400 அபராதம் விதிக்கப்பட்டது.

ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி தலைமையில் அலுவலா்கள் ஆற்காடு நகரில் அண்ணா சாலை, பேருந்து நிலையம், வேலூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகள், மருந்துக் கடைகள், துணிக் கடைகள், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, சமூக இடைவெளியின்றி செயல்பட்ட கடைகளுக்கு மொத்தம் ரூ. 6,500 அபராதம் விதித்தனா்.

இதேபோல், திமிரியில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, விதிகளை மீறிய கடைகளுக்கு ரூ. 2,900 அபராதம் விதிக்கப்பட்டது.

தொடா்ந்து கரோனா தடுப்பு விதிகளை மீறும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று வட்டாட்சியா் எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com