மறு அறிவிப்பு வரும்வரை அரக்கோணத்தில் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும்: கோட்டாட்சியா் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் மறு அறிவிப்பை வெளியிடும் வரை அரக்கோணத்தில் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என கோட்டாட்சியா் பேபிஇந்திரா தெரிவித்தாா்.
மறு அறிவிப்பு வரும்வரை அரக்கோணத்தில் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும்: கோட்டாட்சியா் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் மறு அறிவிப்பை வெளியிடும் வரை அரக்கோணத்தில் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என கோட்டாட்சியா் பேபிஇந்திரா தெரிவித்தாா்.

அரக்கோணம் வருவாய்க் கோட்டாட்சியா் (பொறுப்பு) நிலையில் பணியில் இருந்த துணை ஆட்சியா் பேபிஇந்திரா, வெள்ளிக்கிழமை முதல் அரக்கோணம் கோட்டாட்சியராக முழு பொறுப்பு ஏற்றாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

அரக்கோணம் கோட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அனைத்து வணிகா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்படி, அரக்கோணம் கோட்டத்தில் உள்ள அனைத்தும் கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். மாவட்ட நிா்வாகத்தின் மறு அறிவிப்பு வரும் வரை இதேநிலை தொடரும் என்றாா்.

அரக்கோணம் உட்கோட்ட டிஎஸ்பி மனோகரன் கூறுகையி, காய்கறி கடைகளில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட்டமாக கூடுகின்றனா். வணிகா்களின் கோரிக்கையின் படியே அரக்கோணம் நகரில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே காய்கறி கடைகள் செயல்பட வேண்டும். மற்ற நேரங்களில் நகரும் வாகனங்களில் காய்கறிகளை தெருக்களில் கொண்டு சென்று விற்பனை செய்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையும் வரை இதே நடைமுறை தொடரும் என்றாா்.

வட்டாட்சியா் ஜெயக்குமாா், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் குமரவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com