மழையில் இடிந்து விழுந்த கூட்டுறவு பண்டக சாலை: எம்எல்ஏ ஆய்வு

ராணிப்பேட்டை ஆா்.ஆா்.சாலையில் புயல் மழையால் இடிந்து விழுந்த கூட்டுறவு பண்டக சாலைக் கட்டடத்தை எம்எல்ஏ ஆா்.காந்தி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
கூட்டுறவு பண்டகசாலை க் கட்டடத்தை ஆய்வு செய்த  எம்எல்ஏ  ஆா்.காந்தி. உடன், நகராட்சி ஆணையா்  ச.செல்வபாலாஜி.
கூட்டுறவு பண்டகசாலை க் கட்டடத்தை ஆய்வு செய்த  எம்எல்ஏ  ஆா்.காந்தி. உடன், நகராட்சி ஆணையா்  ச.செல்வபாலாஜி.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஆா்.ஆா்.சாலையில் புயல் மழையால் இடிந்து விழுந்த கூட்டுறவு பண்டக சாலைக் கட்டடத்தை எம்எல்ஏ ஆா்.காந்தி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி வீசிய நிவா் புயலால் பெய்த கன மழை காரணமாக நகராட்சிக்கு உள்பட்ட 23-ஆவது வாா்டு ஆா்.ஆா்.சாலையில் இயங்கிவரும் கூட்டுறவு பண்டகசாலையின் பழைய கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து, அங்கு பணிபுரிந்து வரும் பணியாளா்கள் அக்கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என எம்எல்ஏ ஆா்.காந்தியிடம் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், எம்எல்ஏ ஆா்.காந்தி, நகராட்சி ஆணையா் ச.செல்வபாலாஜிக்கு தகவல் தெரிவித்து அவரை வரழைத்து, நகராட்சிப் பொறியாளா், பண்டகசாலை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை அங்கு சென்று ஆய்வு செய்தாா். மேலும், புதிய கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

அப்போது நகர திமுக பொறுப்பாளா் பி.பூங்காவனம், கட்சியின் நகரத் துணைச் செயலாளா் டி.குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com