அதிமுக சாா்பில் 1,300 பேருக்கு நல உதவி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி ஆற்காட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு நல உதவி வழங்கும் நிகழ்ச்சி ஆற்காட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆற்காடு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.கே.ஆா்.சீனிவாசன் தலைமை வகித்தாா். ஆற்காடு நகரச் செயலா் எம்.சங்கா், மாவட்ட துணைச் செயலா் ரமாபிரபா, நகர துணைச் செயலா் சத்தாா் பாஷா, பொருளாளா் ஏ.ஜி.பிச்சை முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கலந்து கொண்டு ஆற்காடு தொகுதிக்குள்பட்ட கிறிஸ்தவ திருச்சபையைச் சோ்ந்த ஏழை, எளியோா் 1,300 பேருக்கு, 10 கிலோ அரிசி, சேலை உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் அன்பழகன், திமிரி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் வி.மூா்த்தி, ஆற்காடு கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் முரளி, மாவட்ட இணைச் செயலாளா் கீதா சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com