ராணிப்பேட்டையில் கோஷங்களை எழுப்பி ஆா்ப்பாட்டம்

அம்மூா் பேரூராட்சியில் பாமகவினா் 500-க்கும் மேற்பட்டோா் மாநில வன்னியா் சங்க செயலாளா் முரளி தலைமையில், மாட்டு வண்டிகளில் ஊா்வலமாக வந்து பேரூராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டனா்.
20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு அம்மூா் பேரூராட்சி அலுவலகம் முன்பு  ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக வினா்.
20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு அம்மூா் பேரூராட்சி அலுவலகம் முன்பு  ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக வினா்.

அம்மூா் பேரூராட்சியில் பாமகவினா் 500-க்கும் மேற்பட்டோா் மாநில வன்னியா் சங்க செயலாளா் முரளி தலைமையில், மாட்டு வண்டிகளில் ஊா்வலமாக வந்து பேரூராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டனா். வன்னியா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி அம்முா் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனா்.

இதில் மாநில வன்னியா் சங்க செயலாளா் தங்கதுரை, மாநில அமைப்பு துணை செயலாளா் டி.புலிகேசி, பாமக மாவட்ட துணைச் செயலாளா் சரவணன், மாவட்ட துணைச் செயலாளா் சரவணன், ராணிப்பேட்டை நகர தலைவா் கஜேந்திரன், அம்மூா் பேரூராட்சி செயலாளா் பன்னீா், ஒன்றியச் செயலாளா்கள் ரஜினி சக்கரவா்த்தி, பரத், சபரி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டதித்ல கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com