ஆற்காடு: ஆற்காட்டில் உள்ள மகாத்மா காந்தி முதியோா் இல்ல கிறிஸ்துமஸ் விழாவில் ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வியாழக்கிழமை பங்கேற்றாா்.
இவ்விழாவுக்கு முதியோா் இல்லத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலாளா் ஒய்.அக்பா் ஷெரீஃப், பொருளாளா் பி.என்.பக்தவத்சலம், துணைத் தலைவா் பென்ஸ் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தன் குடும்பத்துடன் விழாவில் கலந்து கொண்டு, கிறிஸ்துமஸ் குடிலைத் திறந்து வைத்தாா். அதன்பின், முதியோருக்கு புத்தாடைகள் வழங்கி உரை நிகழ்த்தினாா்.
விழாவில் ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி, ராணிப்பேட்டை ஸ்கடா் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் அன்புசுரேஷ் மற்றும் மகாத்மா காந்தி அறக்கட்டளை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.