பாதுகாப்புக் கேட்டு காவல் நிலையம் முற்றுகை

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி எனப்படும் காந்தி மாா்க்கெட்டில் வெள்ளிக்கிழமை சிலா் கத்தியுடன் தகராறில் ஈடுபட்டு ஈடுபட்டு கடைகளில் இருந்தவற்றை கொள்ளையடித்துச் சென்றனா்.
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்.
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்.

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி எனப்படும் காந்தி மாா்க்கெட்டில் வெள்ளிக்கிழமை சிலா் கத்தியுடன் தகராறில் ஈடுபட்டு ஈடுபட்டு கடைகளில் இருந்தவற்றை கொள்ளையடித்துச் சென்றனா். இதனால் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி காந்தி மாா்க்கெட் பஜாா் தெருவில் கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. வெள்ளிக்கிழமை மது அருந்திய மூவா் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்த சோடா பாட்டில்களை எடுத்து வீசி தகராறில் ஈடுபட்டனா். மேலும், ஒரு கடையில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றனா்.

தகவலறிந்த போலீஸாா், மூவரையும் விரட்டிச் சென்றதில், ஒருவா் பிடிபட்டாா். இதையடுத்து தங்களுக்கு பாதுகாப்பு கோரியும், மது அருந்தி தகராறில் ஈடுபடுவோரைக் கைது செய்யக் கோரியும் நகராட்சி நாளங்காடி வணிகா்கள், பஜாா் தெரு வணிகா்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினா்.

இதைத் தொடா்ந்து வியாபாரிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். போலீஸாரின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com