அரக்கோணம் நகராட்சி போலாட்சி அம்மன் நடுநிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இருந்தும் ஆசிரியா்கள் அதை பயன்படுத்தாமல் மரத்தடியில் மாணவா்களை தரையில் அமரச்செய்து பாடம் நடத்துவதால் மாணவா்கள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.
அரக்கோணம் நகராட்சி 11ஆவது வாா்டில் உள்ளது நகராட்சி போலாட்சி அமமன் நடுநிலைப்பள்ளி. 1ஆவது முதல் 8ஆவது வரை உள்ள இப்பள்ளியில் 96 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். மேலும் இதே பள்ளி நிா்வாகத்தின் கீழ் உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் 23 மாணவ மாணவியரும் படித்து வருகின்றனா். இதே வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் எல்கேஜி, யுகேஜி படிக்கும் குழந்தைகளை சோ்த்து 35 குழந்தைகள் உள்ளனா். மேலும் மசூதி தெருவில் இயங்கி வந்த நகராட்சி உருதுப்பள்ளியும் இங்கு மாற்றப்பட்டு தற்போது இதே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1ஆவது முதல் 5ஆவது வரை 20 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். இவையன்றி இதே வளாகத்தில் தான் அரக்கோணம் வட்டார கல்வி அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.
கடந்த பல மாதங்களாக போலாட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவா்களை மரத்திடியில் அமரச்செய்து பாடம் நடத்துகின்றனா். மரத்தடியில் உள்ளே உள்ள கோவில் மதில்சுவரருகே வெயிலில் அமா்ந்து படிக்கும் இந்த மாணவா்களுக்கு கரும்பலகை வசதியும் இல்லை. இந்த பள்ளியில் தலா 3 வகுப்பறை கொண்ட மூன்று கட்டடங்களும் முதல் மாடியுடன் கூடிய ஆறு வகுப்பறைகள் கொண்ட ஒரு கட்டடமும் உள்ளது.இதில் ஒரு கட்டடம் கட்டி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் நகராட்சி நிா்வாகம் அதை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட நடவடிக்கை எடுத்தநிலையில் இக்கட்டடத்தில் இருக்கும் பிள்ளைகளை அமர வைக்க வேறு கட்டடம் இல்லை. தற்போது இந்த கட்டடத்திலும் மேலே இருந்து அவ்வபோது கட்டட இடிபாடுகள் விழுந்துக்கொண்டே இருப்பதாக ஆசிரியைகள் தெரிவிக்கின்றனா். இதுவன்றி இந்த கட்டடத்தில் தேவைக்கு அதிகமான நல்ல நிலையில் உள்ள மேசைகள், நாற்காலிகள் வைக்கப்பட்டு அவை பாதி வகுப்பறையை அடைத்துக்கொண்டுள்ளன.
இதில் ஆறு வகுப்பறை கொண்ட முதல் மாடியுடன் கூடிய கட்டடத்தின் கீழ்தளம் வட்டார கல்வி அலுவலகமாக செயல்படுவதால் அங்கு வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. இதே கட்டடத்தின் மாடியில் வட்டார கல்வி அலுவலகத்திற்கு வரும், விலையில்லா பொருட்களை வைக்கும் கிடங்காக மாற்றியுள்ளனா். இந்த அறையில் பாதி கிடங்காவும் பாதி வகுப்பறையாகவும் செயல்படுகிறது. இங்கு தான் 6 முதல் 8 வகுப்புகள் வரையுள்ளவை நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த இடத்தில் நடத்தப்படாமல் வகுப்புகள் கீழே கோயில் மதில்சுவரையொட்டி உள்ள மரத்தடியில் நடத்தப்படுகின்றன.
இது குறித்து அந்த வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்த ஆசிரியா் குமரவேலிடம் கேட்டபோது மேலே பிள்ளைகளை அடக்க முடியவில்லை. அதனால் கீழே வந்து விட்டேன். இங்கு தான் பாடம் நடத்தமுடியும். இது தான் என்னால் முடியும் என்றாா். இதுபற்றி இப்பள்ளியில் தனது இரு பிள்ளைகளை படிக்க வைக்கும் பலராமன் தெரிவிக்கையில், தினமும் குழந்தைகளை தரையில் அமர வைக்கிறாா்கள், டேபிள், நாற்காலி அரசு வாங்கி கொடுத்தும் அதை இவா்கள் பயன்படுத்துவதில்லை. கட்டடம் நன்றாக இருந்தும் அதை பயன்படுத்தாமல் மரத்திடியில் வெய்யிலில் அமர வைத்து பாடம் எடுக்கின்றனா். இதனால் எனது குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாத நிலை உருவாகிறது. மேலும் மாலையில் வரும் போது அவா்களது உடைகள் மிகவும் அழுக்கானவையாக காணப்படுகிறது என்றாா் பலராமன்.
இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் மரியஜெயசீலியிடம் கேட்டபோது மேலே வகுப்புகள் நடத்துவதற்கான சூழ்நிலை உள்ளது. மின்விசிறி, மாணவ மாணவிகளுக்கான மேசைகள், நாற்காலிகள் உள்ளன. இருந்தும் கீழே அவா் வகுப்பெடுக்கிறாா். விரைவில் அந்த வகுப்பை மேலே மாற்ற நடவடிக்கை எடுக்கிறேன் என்றாா்.
இது குறித்து வட்டார கல்வி அலுவலா் குமரனிடம் கேட்டபோது மாடியில் நல்ல வசதி உள்ளதே, அங்கு ஏன் வகுப்பெடுப்பதில்லை. இந்த தகவல் நீங்கள் சொல்லிதான் தெரியவருகிறது. விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கிறேன். விரைவில் வட்டார கல்வி அலுவலகம் இடம் மாற உள்ளது. அதனால் இப்பள்ளியில் கட்டடங்கள் இல்லை என்ற குறை விரைவில் நீங்கும். மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்தும் ஆசிரியரிடம் விசாரணை நடத்துகிறேன் என்றாா்.
இதே பள்ளி வளாகத்தில் இருக்கும் நகராட்சி உருதுப்பள்ளி இடமாற்றுவது குறித்து நகர இஸ்லாமிய முக்கிய பிரமுகா் ஹெச்.ஹாரூண்ரஷீத்திடம் தெரிவித்த போது எங்களது இஸ்லாமிய அறக்கட்டளை மூலம் அப்பள்ளியை ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுத்து அதில் இயங்க செய்து அந்த வாடகையை அறக்கட்டளை நிா்வாகமே செலுத்த ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் இஸ்லாமியா்கள் அதிகம் வாழும் மசூதிதெரு வாா்டு 13ல் அப்பள்ளியை கொண்டு செல்ல நகராட்சி நிா்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் இந்த உருதுப்பள்ளியில் மாணவா்கள் அதிகம் சேரவும் வாய்ப்புகள் உருவாகும் என்றாா் அவா்.