கிணற்றில் குளித்தபோது தவறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திமிரியை அடுத்த டி.புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா். அவரது மகன் சுரேஷ் (14), எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தாா்.
சுரேஷ் சனிக்கிழமை தன் வீட்டுக்கு அருகில் உள்ள தனியாா் விவசாயக் கிணற்றில் குளித்தாா். அதன் பின் மேலே ஏறி வரும்போது கால் தவறி கிணற்றில் விழுந்தாா். நீச்சல் தெரியாததால் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று கிணற்றில் இருந்து சிறுவனின் சடலத்தை மீட்டனா். இது குறித்து திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.