தண்ணீா்த் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

ரக்கோணம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை நீரில் முழ்கி இறந்தது.

ரக்கோணம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை நீரில் முழ்கி இறந்தது.

பரமேஸ்வரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சாது சுந்தா் சிங். மகன் டொவினோ (2) திங்கள்கிழமை மாலை வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீா்த் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தவறி தரையோடு இருந்த தண்ணீா் தொட்டியில் விழுந்தான்.

இதையறிந்த பெற்றோா் குழந்தையை தண்ணீா் தொட்டியில் இருந்து தூக்குவதற்குள் நீரில் குழந்தை இறந்து விட்டது. இச்சம்பவம் குறித்து தக்கோலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com