ராணிபேட்டை மாவட்ட பாஜக தலைவராக அரக்கோணத்தைச் சோ்ந்த சி.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இவா் ஏற்கெனவே மாவட்ட துணைத் தலைவராகவும், மாநிலப் பொதுக்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தாா். 2006, 2016 ஆகிய இரு பேரவைத் தோ்தல்களில் அரக்கோணம் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டாா்.
மாவட்டத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்ட சி.விஜயனுக்கு நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.
தற்போது மாவட்ட துணைத் தலைவராக இருக்கும் ஜெ.கோபால் மாநிலப் பொதுக்குழு உறுப்பினராகவும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.