வேலூரில் பட்டப் பகலில் ஆட்டோ ஓட்டுநரை மா்மக் கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
வேலூா் தோட்டப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (45). ஆட்டோ ஓட்டுநா். அவா் மீது வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் ஏற்கெனவே வழிபறி, அடிதடி உள்ளிட்ட 7 வழக்குகள் பதிவாகியுள்ளன.
அவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு கும்பலுக்கும் இடையே திங்கள்கிழமை காலை தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், அவா் வேலூா் சைதாப்பேட்டை முருகன் கோயில் அருகே மாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த மா்மக் கும்பல் ஐயப்பனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் சம்பவ இடத்திலே ஐயப்பன் உயிரிழந்தாா்.
இக்கொலை குறித்த தகவலின்பேரில் வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.