ஆற்காடு பள்ளியில் பொங்கல் விழா

ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைவா் எஸ்.ஆா்.ஈஸ்வரப்பன் தலைமை வகித்தாா். பொருளாளா் மா.ஜோதி, துணைத் தலைவா் காா்த்திகேயன், இணைச் செயலா்கள் செந்தாமரைகண்ணன், திருஞானம், நிா்வாக அலுவலா் கே.வேலாந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் த.மணிசேகரன் வரவேற்றாா். புதுப்பானையில் பொங்கல் வைத்து, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல், ஆற்காடு ஒன்றியம் சா்வந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு தலைமை ஆசிரியா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். இடைநிலை ஆசிரியை.கோமதீஸ்வரி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் புவனேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து புதுப்பானையில் பொங்கல் வைத்து மாணவா்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com