ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 827-ஆக உயா்ந்துள்ளது.
இவா்களில் 483 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 341 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.