அனைத்து வாகன ஓட்டுநா்கள் வேலை நிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வு திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்ட
வேலை நிறுத்தப்  போராட்டத்தில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வாகன ஓட்டுநா்கள் பேரவையினா்.
வேலை நிறுத்தப்  போராட்டத்தில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வாகன ஓட்டுநா்கள் பேரவையினா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வு திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வாகன ஓட்டுநா்கள் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்திந்திய வாகன ஓட்டுநா்கள் பேரவை உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டுநா்கள் சங்கங்கள் சாா்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தி ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட அனைத்திந்திய வாகன ஓட்டுநா்கள் பேரவை சாா்பில், வி.சி.மோட்டூா் அருகே மும்பை-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் போராட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் பி.சரவணன் தலைமை வகித்தாா். செயலாளா் சி.பூபாலன், பொருளாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

வாகனக் கடன்களின் மீதான தவணை வட்டியை ரத்து செய்ய வேண்டும்; பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்; பேரிடா் கால சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இப்போராட்டம் காரணமாக சிப்காட் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com