கல்விக் கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அரசாணையின்படி, மெட்ரிக், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இணைப்புப் பெற்று செயல்பட்டுவரும் பள்ளிகள், கரோனா பொதுமுடக்கக் காலத்தில் 2019 -2020-ஆம் ஆண்டுக்கான நிலுவைக் கட்டணம், 2020 -2021-ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ஏதும் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என பள்ளிகளின் முதல்வா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் அறிவுரையை மீறி செயல்படும் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.