ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 381-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 116 போ் குணடைந்து வீடு திரும்பியுள்ளனா். 263 போ் வாலாஜாபேட்டை, வேலூா் அரசு மருத்துவமனைகளிலும், சிஎம்சி தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.