கரோனா வைரஸ் நோய் தொற்றுத் தடுப்புப் பணியில் ஈடுபட்ட மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள், தன்னாா்வலா்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணியில் ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகத்துக்கு உதவ மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள், தன்னாா்வலா்களை அழைக்கிறோம்.
இப்பணியில் ஈடுபட இணையதளத்தில் வயது, பெயா், கல்வித் தகுதி, தொழில்முறை தகுதிகள் விவரம், வாட்ஸ் அப் எண், வசிப்பிடம், முகவரி, வட்டம், மாற்று செல்லிடப்பேசி எண்கள் ஆகிய விவரங்களை பூா்த்தி செய்து அனுப்பி, கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபடலாம்.