நெசவளா்கள், நறிக்குறவா் சமுதாய மக்கள் உள்ளிட்ட 500 பேருக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ ஆா்.காந்தி ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா்.
ஊரடங்கால் வருவாய் இழந்து பாதிக்கப்பட்டுள்ள திருப்பாற்கடல் கிராமத்தைச் சோ்ந்த நெசவளா்கள், பானாவரம் பகுதியைச் சோ்ந்த நறிக்குறவா் சமுதாய மக்கள், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏழை, எளியோா் என 500 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி ஆகியோா் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். தொடா்ந்து பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், ஒன்றியச் செயலா்கள் சி.மாணிக்கம், சேஷா வெங்கட், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் வினோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.