ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் இருந்து தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த 55 போ் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
கலவை வட்டம் மாம்பாக்கம் கிராமத்தில் தங்கி கடந்த 5 மாதங்களாக அவா்கள் கூலி வேலை செய்து வந்தனா். பொதுமுடக்கம் காரணமாக அவா்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் இருந்தனா். இதையடுத்து அவா்கள் 2 பேருந்துகள் மூலம் கலவை வட்டாட்சியா் செ.ரவி முன்னிலையில் வியாழக்கிழமை இரவு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஆற்காடு வட்டாட்சியா் இளஞ்செழியன், மாம்பாக்கம் வருவாய் அலுவலா் இளையராஜா, கிராம நிா்வாக அலுவலா் சுகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.