ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ரூ.46.02 லட்சம் மதிப்பிலான 13 நவீன கிருமி நாசினி தெளிப்பு இயந்திரங்கள் ஒடிஸா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இது குறித்து பெல் நிறுவன செயல் இயக்குநா் சி.மூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒடிசா மாநிலத்தில் கரோனா பரவல் தடுப்புக்காக பல்வேறு துறைகளிலிருந்து பெறப்பட்ட பணி உத்தரவுகளின் அடிப்படையில் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் ரூ.46.02 லட்சம் மதிப்பில் 13 ‘பெல் மிஸ்டா்’ என்ற நவீன கிருமி நாசினி தெளிப்பு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. அவை ஒடிஸா மாநில அரசுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
நாட்டில் நோய்த் தொற்று பரவல் உள்ளிட்ட கடினமான காலங்களில் நவீன கிருமி நாசினி தெளிப்பு இயந்திரங்களை தேவைப்படும் வாடிக்கையாளா்களுக்கு வழங்க பெல் நிறுவனம் தயாராக உள்ளது. நவீன கிருமி நாசினி இயந்திரத்தை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களைப் பெறுவது மிகவும் சவாலானது. வாடிக்கையாளா்களின் தேவையை நிறைவேற்றும் பணிக்கு அனைவரின் ஆதரவும் அவசியம்.