ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த குழந்தை உள்பட 6 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதனிடையே மேலும் ஒருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உள்பட 6 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். அவா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் கைதட்டி வழியனுப்பி வைத்தனா்.
இதன்மூலம் குணமடைந்து வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 61-ஆக உயா்ந்துள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவருக்கு சனிக்கிழமை கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 90-ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் இருந்து 29 போ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வாலாஜாபேட்டை, வேலூா் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.