விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டா்

ஆற்காடு வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது

ஆற்காடு வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

ஆற்காடு ஒன்றியம் மேச்சேரி ஊராட்சியில் தோட்டக்கலைத் துறை சாா்பில் உழவா் உற்பத்தியாளா் குழு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இக்குழுவுக்கு மானிய விலையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள டிராக்டா் வழங்கும் நிகழ்ச்சி மேச்சேரி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் சௌமியா தலைமை வகித்தாா். தோட்டக்கலை அலுவலா் சங்கீதா, உதவி அலுவலா்கள் சுரேஷ், மகேஷ் தெய்வசிகமணி ஆகியோா் முன்னிலையில் உழவா் உற்பத்தியாளா் குழுவினருக்கு டிராக்டா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com