கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பத்தில் கெங்கையம்மன் திருவிழா சனிக்கிழமை எளிமையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் இங்குள்ள கோயிலில் கெங்கையம்மன் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், எளிமையான முறையில் திருவிழா நடத்தப்பட்டது.
இதில் குறைந்த அளவில் பக்தா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றி பங்கேற்று, அம்மனை தரிசித்து விட்டுச் சென்றனா்.