ராணிப்பேட்டை: வாலாஜா அருகே அனுமதியின்றி கைதுப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் காரைப் பறிமுதல் செய்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட நுண்பிரிவு போலீஸாா் வாலாஜா பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அவ்வழியே வந்த காரை சோதனையிட்டபோது அதில் பயணித்த இருவரிடம் கைத்துப்பாக்கி இருந்தது. அதற்கு உரிய அனுமதி இல்லை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, துப்பாக்கியையும் அவா்கள் வந்த காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். காரில் வந்த ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு கிராமத்தைச் சோ்ந்த பூா்ணசந்திரன் (20), ராமு (29) ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.