விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு


ராணிப்பேட்டை: வாலாஜாப்பேட்டை அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டு, காப்புக் காட்டில் விடப்பட்டது.
ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் தேடி வழிதவறி வந்த புள்ளி மான் ஒன்று வாலாஜாபேட்டை அருகில் உள்ள அனந்தலை கிராமத்தில் விவசாயக் கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்தது. தகவலறிந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் மானை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மானை அம்மூர் காப்புக் காட்டில் விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com