அரக்கோணம்: நெமிலி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா் கூட்டம் பனப்பாக்கத்தை அடுத்த நெடும்புலியில் புதன்கிழமை நடைபெற்றது.
நெமிலி மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் அருணாபதி தலைமை வகித்தாா். மாவட்ட விசைத்தறியாளா் பிரிவு செயலா் என்.டி.பி.தயாளன் முன்னிலை வகித்தாா். பனப்பாக்கம் பேரூராட்சி அதிமுக செயலா் கா்ணன் வரவேற்றாா். இதில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலரும், அரக்கோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சு.ரவி, சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத், ஒன்றியச் செயலா்கள் (நெமிலி கிழக்கு) ஏ.ஜி.விஜயன், (அரக்கோணம் மேற்கு) பழனி, மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளா் அன்பரசு, மாவட்ட மருத்துவரணிச் செயலா் கிருபா, ஒன்றிய துணைச் செயலா் தனவந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.