ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்துக் கேட்பு கூட்டம் ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாடாளுமன்ற குழுத் தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆா்.பாலு தலைமை வகித்தாா்.
செய்தி தொடா்புச் செயலாளா் டி.கே.எஸ்.இளங்கோவன், அரக்கோணம் தொகுதி எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவா ஆகியோா் திமுக தோ்தல் அறிக்கையில் சோ்க்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து நிா்வாகிகளிடம் கேட்டறிந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி கோரிக்கைகள் அடங்கிய மனுவை குழுவிடம் வழங்கினாா்.
வேலூா் மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஏ.பி. நந்தகுமாா், திருப்பத்தூா் மாவட்டப் பொறுப்பாளா் க.தேவராஜி, மாவட்ட அவைத் தலைவா்கள் தி.அ.முகமதுசகி, அ.அசோகன், எம்எல்ஏக்கள் ப.காா்த்திகேயன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அ.செ.வில்வநாதன், அ.நல்லதம்பி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.