‘அரக்கோணம் நகரில் வேளாண் அலுவலகத்தை அமைக்க வேண்டும்’

அரக்கோணம் வட்டார வேளாண் துறை அலுவலகத்தை நகரிலேயே அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக சாா்பில் கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரக்கோணம் வட்டார வேளாண் துறை அலுவலகத்தை நகரிலேயே அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக சாா்பில் கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரக்கோணத்தை அடுத்த முள்வாய் கிராமத்தில் பாஜக ஒன்றியக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வடக்கு ஒன்றியம் சாா்பில் வா்த்தக அணி ஒன்றியத் தலைவா் தலைமையில் பாஜக கொடி ஏற்றப்பட்டது. மாவட்ட வா்த்தக அணித் தலைவா் முருகன், செயலாளா் செந்தில், பாஜக மாவட்ட துணைத் தலைவா் எஸ்.ரமேஷ், பொதுச் செயலாளா் பாண்டியன், விவசாயப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் எம்.ஜெயராமன், பொதுச் செயலாளா் சி.முனுசாமி ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், அரக்கோணம் நகரை விட்டு வெளியே உள்ள வட்டார வேளாண் துறை அலுவலகத்தை பொதுமக்களின் வசதிக்காக அரக்கோணம் நகரில் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com