மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

அரக்கோணம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

அரக்கோணம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த செய்யூா் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் காந்தி(18). தனது பாட்டி துளசி வீட்டில் வசித்து வந்தாா். சனிக்கிழமை, காந்தி வீட்டில் குளியல் அறையில் மின் இணைப்பில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா்.

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே காந்தி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com