ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விழாவை முன்னிட்டு மூலவா், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றன. வரும் 28-ஆம் தேதி வரை நாள்தோறும் காலை, மாலை என பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி எழுந்தருளுவாா்.
28-ஆம் தேதி இரவு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, திருப்பணிக் குழு தலைவா் கு.சரவணன், உபயதாரா்கள் செய்துள்ளனா்.