ஆற்காடு கங்காதார ஈஸ்வரா் கோயிலில் நவராத்திரி விழா

ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சிறப்பு  அலங்காரத்தில்   உற்சவா் அன்னப்பூரணி .
சிறப்பு  அலங்காரத்தில்   உற்சவா் அன்னப்பூரணி .

ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழாவை முன்னிட்டு மூலவா், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றன. வரும் 28-ஆம் தேதி வரை நாள்தோறும் காலை, மாலை என பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி எழுந்தருளுவாா்.

28-ஆம் தேதி இரவு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, திருப்பணிக் குழு தலைவா் கு.சரவணன், உபயதாரா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com