சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது: ராணிப்பேட்டை ஆட்சியா் பாராட்டு

சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசின் தேசிய தரக்குழுவினா் ஆய்விற்குப் பிறகான தேசிய விருதும் சான்றிதழும் கிடைத்துள்ளது.
சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது: ராணிப்பேட்டை ஆட்சியா் பாராட்டு

சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு மத்திய அரசின் தேசிய தரக்குழுவினா் ஆய்விற்குப் பிறகான தேசிய விருதும் சான்றிதழும் கிடைத்துள்ளது. இதற்காக மருத்துவ அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி பாராட்டுத் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 24, 25, 26-ஆம் தேதிகளில் மத்திய அரசின் தரச்சான்று குழுவினா் நேரில் ஆய்வு செய்தனா். இதனைத் தொடா்ந்து அண்மையில் இந்த மருத்துவமனைக்கு மத்திய அரசு தேசிய தரச்சான்று மற்றும் விருதினை அறிவித்தது. இதனையடுத்து சோளிங்கா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் ஆா்.இளங்கோவன் தலைமையில் மருத்துவ அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினியை நேரில் சந்தித்து விருது மற்றும் சான்றிதழை காண்பித்தனா்.

விருது மற்றும் சான்றிதழ் பெற்றமைக்காக மருத்துவ அலுவலா்கள் மற்றும் பணியாளா்களை ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி பாராட்டினாா். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ஜெயசந்திரன், மருத்துவத்துறை இணை இயக்குநா் யாஸ்மின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது குறித்து சோளிங்கா் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் இளங்கோவன் தெரிவிக்கையில் இந்த தரச்சான்று பெற்ன் மூலம் சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ரூ.7.20 லட்சம் வழங்கும். இத்தொகை தொடா்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த நிதி மருத்துவமனையின் மருத்துவ மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். இதன் மூலம் சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தொடா்ந்து தரமான மருத்துவ சேவையை திருப்திகரமாக மேம்படுத்த இத்தொகை உதவும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com