பொது முடக்க உத்தரவுகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க குழு அமைப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பொது முடக்க உத்தரவுகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க 98 அரசு அலுவலா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பொது முடக்க உத்தரவுகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க 98 அரசு அலுவலா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க அரசு அறிவிக்கும் கட்டுப்பாடுகளை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை, அபராதம் விதிக்க 18 வருவாய் ஆய்வாளா்கள், 26 சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்ட 98 அரசுத் துறை அலுவலா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை மீறினால் ரூ. 500 அபராதம், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம், முடி திருத்தும் நிலையம், அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், அரசால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டால் தனி நபருக்கு ரூ. 500, வாகனங்கள், வணிக வளாகங்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com