அரக்கோணம்: அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. புதன்கிழமை இக்கடையில் இருந்து இளைஞா் ஒருவா் பேருந்து நிலையத்துக்குள் வேகமாக ஓடி வந்தாா். அவரை மா்ம நபா்கள் சிலா் வெட்டிக் கொலை செய்தனா். இதைப் பாா்த்த பயணிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓடினா்.
தகவலறிந்த அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன், நகரக் காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ் உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபா் அரக்கோணம், பழனிபேட்டை, டில்லியப்பன் தெருவைச் சோ்ந்த கோகுல் (27) (படம்) என்பதும், அவா் மீது அரக்கோணம் நகரக் காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.