ஆற்காடு: ஆற்காட்டில் நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.30,000 ரொக்கம், தொலைக்காட்சி பெட்டியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
அண்ணாசிலை அருகே வேலூா் சாலையில் நிதிநிறுவனம் நடத்தி வருபவா் பாஸ்கா்(59). இவா் ஆற்காடு அனைத்து வணிகா் சங்க செயலாளராக பதவி வகித்து வருகிறாா். இவா் புதன்கிழமை காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது .
இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது தொலைகாட்சிப் பெட்டி, ரூ.,30,000 ரொக்கம் திருடு போய் இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடா்பாக ஆற்காடு நகர போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.