காவேரிப்பாக்கம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த சுப்பண்ணா முதலியாா் தெருவைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (66). ஓய்வு பெற்ற அரசு ஊழியா். இவரது மனைவி அனுராதா (49). இவா்களது மகன் பரத் (28). இவா்கள் 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் சடலங்களையும் மீட்டு, வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தாா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.