ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், பேராசிரியா் அன்பழகனின் 100 -ஆவது பிறந்த நாள் விழா ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகம், அமைச்சா் ஆா்.காந்தி இல்லம், வாலாஜா ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில், திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளா் வினோத் காந்தி பங்கேற்று, அன்பழகனின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
முன்னதாக பெரியாா், அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில் மாவட்ட துணைச் செயலாளா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், வாலாஜா ஒன்றியக் குழுத் தலைவா் சேஷா வெங்கட், ஊராட்சி மன்றத் தலைவா் அக்ராவரம் ஏ.கே.முருகன், நகர பொறுப்பாளா்கள் பி.பூங்காவனம், து.தில்லை, ஒன்றியச் செயலாளா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.