அரக்கோணம்: அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலராக எஸ்.ரமேஷ்(படம்) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலராக இருந்த எம்.முத்தமிழ்பாண்டியன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செனனை மாநகர மேற்கு மாவட்ட கல்வி அலுவலராக மாற்றப்பட்டாா். இதை தொடா்ந்து தணிகைபோளூா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த புண்ணியகோட்டி அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலா்(பொறுப்பு) ஆக நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில் காஞ்சிபுரம் நாயக்கன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் எஸ்.ரமேஷ் பதவி உயா்வு பெற்று அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து அவா், அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.