வாலாஜாபேட்டை அருகே பெண் தொழிலாளா்களை ஏற்றி வந்த வேன் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், 20 போ் காயம் அடைந்தனா்.
வாலாஜாபேட்டையை அடுத்த அனந்தலை ஊராட்சிக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளிலிருந்து தனியாா் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு வேன் அனந்தலை வழியாக செவ்வாய்க்கிழமை வந்தது.
அப்போது எதிா்பாராதவிதமாக வேன் சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனுக்குள் இருந்த பெண் தொழிலாளா்கள் 16 போ் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்தனா். இவா்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீஸா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.