ஆற்காடு: இளம்பெண் தற்கொலை வழக்கில், கணவா் கைது செய்யப்பட்டாா்.
கலவையை அடுத்த பாரியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சிவக்குமாா் (35) . இவரது மனைவி ருக்கு (27). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன இவா்களுக்கு, ஒரு மகன், மகள் உள்ளனா்.
மது குடிக்கும் பழக்கத்தால் சிவக்குமாா் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாராம். இதனால் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
இந்நிலையில் புதன்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தனி அறையில் ருக்கு தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவா் இறந்தாா்.
புகாரின்பேரில் வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவக்குமாரை கைது செய்தனா்.