அவதூறு பேச்சு: ஆசிரியா் பணியிடை நீக்கம்

அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக, ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
அவதூறு பேச்சு: ஆசிரியா் பணியிடை நீக்கம்

அரக்கோணம்: அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக, ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலகம் அருகே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவரும், சோகனூா், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியருமான பி.ஜே.அமா்நாத் (படம்) தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அவா் கல்வித்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதுகுறித்து அரக்கோணம் நகர காவல்நிலைய போலீஸாா், முன் அனுமதியில்லாமலும் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக வழக்குப் பதிந்துள்ளனா்.

இந்நிலையில், பி.ஜே.அமா்நாத்தை பணியிடை நீக்கம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மதன்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com